ஞாயிறு, 13 டிசம்பர், 2020

நல்லூரில் ஐஸ்கிறீம் கடையில் சமையல் அறையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றின் சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக
 உடணடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக
 விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை 
குறுப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 15 அக்டோபர், 2020

ஊவா மாகாணத்தில் இலஞ்சம் பெற்ற நகர அபிவிருத்தி பணிப்பாளர் கைது

 14,000 ரூபாயை இலஞ்சமாக பெற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊவா மாகாண அலுவலக பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் கைது 
செய்யப்பட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

புதன், 14 அக்டோபர், 2020

நாட்டில் இராணுவத் தளபதி போக்குவரத்து தொடர்பில் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் இராணுவத் தளபதி மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை
 விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளும் ஏனைய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் 
அறிவுறுத்தியுள்ளார்.
வாரத்திற்கு ஒரு தடவையேனும் தொழிற்சாலை ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருமளவான ஊழியர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு தொழிற்சாலை ஊழியர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்களாயின் அது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் 
தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



அபாய நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் 
தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட 
வேண்டும் யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இல் இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது.
 பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண
 மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்த போதிலும் யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோனா தடுப்பிற்கு ஒத்துழைப்பு
 வழங்க வேண்டும்.
அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விபரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும். தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மானிப்பாய் கட்டுடை பகுதியில் கொள்ளையடிக்கும் கும்பலில் இருவர் கைது


யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து 
வந்த கொள்ளைக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாகவும், இருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் பயங்கரமான சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் பொலிஸார் 
தெரிவிக்கும் போது;
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை பொலிஸ் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.அத்துடன் இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு 
சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.இந்த 
நிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது
 செய்யப்பட்டனர்.இவ்வாறு கைதானவர்கள் கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே ஆவார்கள்.கைதானவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.கும்பலைச் சேர்ந்த 
மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால், வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு 
வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 22 ஜூலை, 2020

யாழ் நல்லைக்கந்தன் திருவிழாவிற்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு 
செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.அத்துடன் அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல், மற்றும் வியாபார
 நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ். மாநகர சபையில் 21-07-20.செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே
 மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான
 பக்தர்களை 
அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இருப்பினும், சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதர்களுக்கு 
உத்தியோகபூர்வமாக
 எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.இதனால், ஏற்கனவே
 தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடைசெய்யப்படுகிறது’ என்றும் யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் மேலும் 
குறிப்பிட்டார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


அம்மை நோய் தீர்க்கும்..பதநீர், ஆண்மைக்கோளாறை நீக்குமாம்

பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?', `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?'... பனை மரம் பற்றி இதுபோன்று ஏராளமான பழமொழிகள் உள்ளன. பனை மரம்... இலை
 முதல் விதை, பழம் என அதன் அனைத்து உறுப்புகளும் மனிதனுக்கு நலம் தரக்கூடியவை. அதனால்தான் தமிழக அரசின் மாநில மரம் என்ற பெருமையை பனைமரம் கொண்டுள்ளது. 
பனைமரத்தை பத்திரகாளியின் அம்சமாகக் கருதி வணங்கி வருகிறார்கள். சிலர் வேரியம்மன் என்ற பெண் தெய்வமாகவும்
 வணங்கி
 வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல திருக்கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாகவும் உள்ளது. நுங்கு, 
பதநீர் போன்றவை தமிழரின் உணவுகள். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பனை மரத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



சனி, 18 ஜூலை, 2020

யாழ் பல்கலை விஞ்ஞானபீட மாணவர்கள் சிலரிடையே கத்திக்குத்து

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று 17-07-20 . 
11 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது..
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவருக்கு கத்தியால் குத்த முற்பட்டுள்ளார்.
அதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 
சேர்க்கப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீட இறுதி ஆண்டு பரீட்சைகள் நடைபெறும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து தங்கியிருந்தவர்களே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு
 வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


வெள்ளி, 10 ஜூலை, 2020

கொரோனா பரிசோதனைக் கூடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு பரிசோதனைக் கூடம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய 
ஆய்வகம் கட்டுநாயக்க விமான நிலைய 
வளாகத்தில். 09-07-20வியாழக்கிழமை .அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, 
கட்டுநாயக்க
 விமான நிலையத்தினை வந்தடையும் பயணிகளுக்கு, இலவசமாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளல் மற்றும் அதன் முடிவு 
அறிக்கையினை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆய்வகத்தில் ஒரேநாளில் 500 பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>


வியாழன், 26 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என யாழ். போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதிர்வரும் நாட்களில் தொற்றுக்கு உள்ளானவர்கள் எமது பகுதியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது எனவும் 
தெரிவித்துள்ளார்.
ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்றும் வைத்திசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் இதுவரை 32 பேர், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் வெளியேறியுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கே யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டடுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 24 மார்ச், 2020

ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை வரை 5 மாவட்டங்களுக்களுக்கு

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு (24).இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு மீண்டும் அமுல் செய்யப்பட்டிருந்தது.
இது எதிர்வரும் (27) வெள்ளிக்கிழமை
 காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அதேதினத்தில் பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல்செய்யப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஏனைய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு 
தளர்த்த்தப்படவுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரோனா வைரஸ்சால் ஊரடங்கு உத்தரவு வடக்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிற்கு விதிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவு செவ்வாய்கிழமை (24.03.20) காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்று மதியம் 2மணிக்கு மீளவும் ஊரடங்கு அமுலாகும்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

புதன், 26 பிப்ரவரி, 2020

ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங் குயாழில்

யாழ் சிறுவா்களின் ஆங்கில திறமையை விளையாட்டு மூலம் அதிகரிக்க ஸ்கிரபிள் இலவச கருத்தரங்கு
பெற்றோர்களே! மாணவர்களே! பாடசாலை மாணவர்களின் ஆங்கில திறமை மற்றும் தலைமைத்துவ பண்பினை விருத்தி செய்யும் சர்வதேச ஸ்கிரபிள் விளையாட்டுபற்றிய அறிமுக கருத்தரங்கு சிறகுகள் அமையத்தினரால் 01.03.2020 ஞாயிறு அன்று மாலை 2.00 மணி முதல் 4.00 மணிவரை தெல்லிப்பளையிலுள்ள AZIIE ஆங்கில 
கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.ஆா்வமுள்ள மற்றும் Scrabble கற்றுக்கொள்ள விரும்பும் அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ள முடியும்.அனுமதி இலவசம். மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளதால் உங்கள் முன்பதிவுகளுக்கு அழையுங்கள் 0777177622.இந்த இணைப்பினை க்ளிக் செய்து முகப்புத்தகத்தில் நிகழ்வு பக்கத்தில் உங்கள் வரவினை உறுதி செய்து கொள்ளுங்கள்.https://www.facebook.com/events/482756432601342/
வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரபலமாக
 உள்ள இந்த சர்வதேச scrabble விளையாட்டு இலங்கையின் தலைநகரின் பிரபல பாடசாலைகளில் கழகங்கள் அமைத்து மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.யாழ்ப்பாண மாணவர்களும் இதனை கற்றுக்கொள்ள AZIIE ஆங்கில கல்வி நிறுவனத்தினர் இந்த இலவச கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளனர்.
Scrabble தவிர தலைமைத்துவம் மற்றும் சமயோசித எண்ணங்களை வளர்க்கும் சதுரங்கம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு முறைமைகளை கற்றுதரும் மொனேபொலி, கணிதம் மற்றும் சிந்தனையாற்றலை அதிகரிக்கும் ஜப்பானிய விளையாட்டான சுடோக்கு மற்றும்
 யூத குழந்தைகளிடையே பிரபலமான முகாமைத்துவ விளையாட்டுக்கள் போன்ற பல விளையாட்டுக்களை AZIIE (AtoZ International Institute of English) ஆங்கில கல்வி நிறுவனம் வாராந்தம் இலவசமாக தமது மாணவா்களுக்கு பயிற்சியளித்து போட்டிகளை நடத்தி வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியத்தை கெடுக்கும் கைத்தொலைபேசி Gameகளில் மூழ்கி கிடக்கும் இன்றய தலைமுறை சிறுவர்களுக்கு இதுபோன்ற கல்வி நடவடிக்கைகளுடன் கூடிய ஆற்றலை அதிகரிக்கும் விளையாட்டுக்களை
 அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திவருவது, காலத்தின் கட்டாயமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும்.எந்த முன்னனுபவமோ, பயிற்சிகளோ, ஆங்கில அறிவோ இல்லாத ஆா்வமுள்ள எந்தஒரு மாணவ மாணவியும் இந்த கருத்தரங்கில் பங்குபற்றி கற்றுக்கொள்ள முடியும்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மாணவா்களின் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆங்கிலப் புலமையினை அதிகரிக்க இந்த இலவச சந்தா்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இடம் AZIIE பொன்னையா லேன், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
Scrabble Meetup Jaffna,
ஊடக அனுசரணை newlanka.lk
இது போன்ற வாய்ப்புக்கள் உங்கள் நண்பா்கள், நண்பர்களின் பிள்ளைகளுக்கு உபயோகமானதாக இருக்க கூடும் என்பதால் இந்த தகவலை இப்போதே Share செய்யுங்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




புதுக்குடியிருப்பில் அறு கிலோ கஞ்சாவுடன் மூவர் அதிரடியாகக் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற 
இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் பெயரில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த சோதனை
 நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்களை அழைத்து சென்று சுண்டிக்குளம் கடற்கரை 
பகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் அவர்கள் மூவரையும் கைது 
செய்துள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள் இரண்டினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.மேலதிக 
விசாரணைகளை
 மேற்கொண்டு வரும் புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த கஞ்சாவின் பெறுமதி 8 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரை எனவும் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 26, 39, 41 வயதுடைய குடும்பஸ்தர்கள் என்றும் குற்றவாளிகளை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
 தெரிவித்துள்ளார்கள்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தென்மராட்சியில் வீட்டிற்குள் புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல்

யாழ்.தென்மராட்சியில் வீடொன்றுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.தென்மராட்சி, மாசேரிப் பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக 
தெரிவிக்கப்படுகிறது.மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 
பஸ் மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி 
வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.தனியார் போக்குவரவு பேருந்து ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே தாக்குதல் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடியமையினால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.மக்கள் ஒன்றுகூடியமையினால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 24 பிப்ரவரி, 2020

கேரளக் கஞ்சாவை யாழ் வாசி மரக்கறி மூட்டைகளுக்குள் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக 
சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று இரவு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து,
 அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.






சனி, 4 ஜனவரி, 2020

பொற்பதி பகுதியில் மணல் கொள்ளையர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களை பிரதேச மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இந் நிலையில், மக்கள் முறைப்பாடு வழங்கி 5 மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுவடமராட்சி கிழக்கு
 பொற்பதி குடத்தனை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் ஒன்றினை பிரதேசவாசிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக வீதி ஓரமாக மணல் மண்ணை
 ஏற்றிக் கொண்டிருந்த வேளை, பொற்பதி இளைஞர்களும் பொது மக்களும் இணைந்து ரிப்பர் வாகனம் ஒன்றினையும் சாரதி மற்றும் ஒருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசாருக்கும் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கும் அதிகாலை 3:15 மணியிலிருந்து பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் காலை 8 மணிக்கே பொலிசார் சம்பவ இடத்திற்கு சமூகமளித்தனர்.
இந்நிலையில், மடக்கிப்பிடிக்கப்பட்ட ரிப்பர் மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோரை பொலிசார் வரும்வரை காத்திருந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்து.அண்மைய நாட்களாக குறித்த பிரதேசத்தில் திருட்டுத் தனமாக மணல் அகழ்வதை கட்டுப்படுத்தும் நோக்கோடு, பொற்பதி இளைஞர்கள் விழிப்புக் குழு ஒன்றினை அமைத்து தமது சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 3 ஜனவரி, 2020

புதிய பொலிஸ் மா அதிபராக யாழ். மாவட்டத்திற்கு கபில கடுவத்த கடமையேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.மூத்த பொலிஸ் 
அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்
 அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த 
மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>