சனி, 4 ஜனவரி, 2020

பொற்பதி பகுதியில் மணல் கொள்ளையர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

யாழ்.வடமராட்சி கிழக்கு பொற்பதி பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர்களை பிரதேச மக்கள் விரட்டியடித்துள்ளனர்.
இந் நிலையில், மக்கள் முறைப்பாடு வழங்கி 5 மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவதுவடமராட்சி கிழக்கு
 பொற்பதி குடத்தனை பகுதியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனம் ஒன்றினை பிரதேசவாசிகள் இன்று அதிகாலை 4 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோதமாக வீதி ஓரமாக மணல் மண்ணை
 ஏற்றிக் கொண்டிருந்த வேளை, பொற்பதி இளைஞர்களும் பொது மக்களும் இணைந்து ரிப்பர் வாகனம் ஒன்றினையும் சாரதி மற்றும் ஒருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசாருக்கும் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கும் அதிகாலை 3:15 மணியிலிருந்து பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் காலை 8 மணிக்கே பொலிசார் சம்பவ இடத்திற்கு சமூகமளித்தனர்.
இந்நிலையில், மடக்கிப்பிடிக்கப்பட்ட ரிப்பர் மற்றும் சாரதி உதவியாளர் ஆகியோரை பொலிசார் வரும்வரை காத்திருந்து, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்து.அண்மைய நாட்களாக குறித்த பிரதேசத்தில் திருட்டுத் தனமாக மணல் அகழ்வதை கட்டுப்படுத்தும் நோக்கோடு, பொற்பதி இளைஞர்கள் விழிப்புக் குழு ஒன்றினை அமைத்து தமது சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 3 ஜனவரி, 2020

புதிய பொலிஸ் மா அதிபராக யாழ். மாவட்டத்திற்கு கபில கடுவத்த கடமையேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.மூத்த பொலிஸ் 
அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்
 அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த 
மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>