திங்கள், 24 பிப்ரவரி, 2020

கேரளக் கஞ்சாவை யாழ் வாசி மரக்கறி மூட்டைகளுக்குள் கடத்தியவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக 
சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு நேற்று இரவு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து,
 அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக