வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் ‘அம்மாச்சி’ என்ற பேரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று
எதிர்வரும் 02.01.2020. வியாழக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது.முல்லைத்தீவு
பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு அபிவிரத்தி
ஒருங்கிணைப்பக்குழுத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் மல்லாவி
மக்களுக்கு பாரம்பரிய
உணவு வகைகளை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டவிருக்கின்றது.இதேவேளை அன்றைய தினம் அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விவசாயப்பயிற்சி நிலைய கட்டடமும் திறந்துவைக்கப்பட உள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக